வணக்கம்!
உங்களை நட்புடன் வரவேற்கிறேன்!
ப்ளாக் பழக்கம் என்றாலும், தனி ஆவர்த்தனமாக , தன் வழியில் செல்ல எண்ணியே இத்தளம்! பாலைவனச் சோலையாய், அலைகடல் தீவாய், மலையிடைச்சுனையாய் உடன்வரும் , எதிர்வரும் அன்பர்களே , உம்மீர் யாவரையும் எம் பயணவேளை வழித்துணையாய் எண்ணிக்களம் புகுகிறேன்!
கலங்கரை விலக்காக அல்லாவிடினும், சிற்றூர்களில், மரங்களில் கட்டியிருக்கும் வழிகாட்டிப்பலகையாக எண்ணி தைரியமாக வரும் அன்பர்களே! பயணநேரம் மாறினும் பாதை உறுதி! தடம்புரளாத சீரான முன்னோரின் வழியில், நிகழ்கால உலகிற்காக., நாம் எதிர்காலம் நோக்கிச் செல்வோம், வாருங்கள் தோழர்களே!
நேசமுடன்,
ஞானகுமாரன்.